முதல்ல இட்லி உப்மால்லாம் பதிவா போடனுமான்னு நினைச்சேன். ஆனா இப்ப பெரும்பாலான வீடுகளில் ஆண்களும் குழந்தைகளும் இட்லின்னாலே என்னம்மா எப்ப பாத்தாலும் இட்லியே பண்ணி போரடிக்கரேன்னு முகம் சுளிக்கிரார்கள்.தோசையை விரும்பி சாப்பிடுவதுபோல இட்லியையும் அவங்க விரும்பி சாப்பிடனும்னா இப்படி ஏதானும் மேக்கப் செய்து கொடுக்கனும். கலர் ஃபுல்லா இருந்தா சாப்பிடுவாங்க. என் பேரன்களிடம் நான் இதை பனீர் உப்மான்னு சொல்லி கொடுப்பேன். இட்லிய சதுரமாக பனீர் துண்டுகள் போலவே கட்செய்துகாய்களும் சேர்த்து உப்மா செய்தால் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. தினசரியுமே என்ன டிபன் செய்ய, என்ன லஞ்ச் செய்யன்னு சர்க்கஸ்தான் பண்ண வேண்டி இருக்கு.ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்க மாட்டேங்குது. எல்லாரையும் திருப்தி செய்யனும்னா ஏதானும் புதுசு புதுசா யோசிக்கத்தானே வேனும்.
தேவையான பொருட்கள்.
ஏற்கனவே செய்து வைத்திருக்கும் இட்லிகள் --------- 4
வெங்காயம்-------------------------------------------------------- 1
தக்காளி-------------------------------------------------------------- 1
உருளைக்கிழங்கு =----------------------------------------------- 1
பச்சைமிளகாய்---------------------------------------------------- 2
கறி வேப்பிலை------------------------------------------ கொஞ்சம்
தாளிக்க
எண்ணை----------------------- 2 ஸ்பூன்
கடுகு-----------------------------1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-------------- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு-------------- 1 ஸ்பூன்
மஞ்சபொடி-------------------- கால் டீஸ்பூன்
உப்பு---------------------------- சிறிதளவு
செய் முறை
காய்களை நன்கு கழுவி சின்ன துண்டங்களாக கட் செய்து கொள்ளவும்
இட்லிகளை உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி கடுகு
பொரிந்ததும் பருப்புகபோட்டு சிவந்ததும் மிளகாய் வெங்காயம் போட்டு பாதி வதங்கியதும் காய்களைச்சேர்க்கவும். விருப்ப பட்டவர்கள் ஒரு கைப்பிடி
பச்சை பட்டாணி, ஒரு குடை மிளகா சேர்த்துக்கொள்ளலாம் ஒரு கண்ணுள்ள தட்டால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடவும். இட்லியில் உப்பு இருக்கும்,
அதனால காய்களுக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.காய்கள் நன்குவதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளைச்சேர்த்து 5-
நிமிடங்களுக்கு வதக்கி இறக்கவும்.
நான் ஒரு ஆளுக்கு தேவையான அளவுகளுக்குத்தான் சொல்லி இருக்கேன் அதிக நபர்களுக்கு செய்யும்போது அதற்கேற்றார்போல் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவும்.