நொறுக்ஸ்.
போன பதிவுகொஞ்சம் சீரியுஸ்மேட்டரா ஆச்சு இல்லியா?அதனால இப்பகொஞ்சம்
நொறுக்குத்தீனி.(கொஞ்சம் மொக்கைதான்,பொருக்ஸ்)
முதல் மொக்கை 1
என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு